பாலை வனத்தில் விதைத்து வளர்த்தேன்
என் காதல் வித்துக்களை ..
கானல் நீரில் வேர்கள் நனையும் என்றேதான்
நானும் கனவுடன் அவனது நினைவுடன் காத்துக் கிடந்தேன்..
என் காதல் வித்துக்களை ..
கானல் நீரில் வேர்கள் நனையும் என்றேதான்
நானும் கனவுடன் அவனது நினைவுடன் காத்துக் கிடந்தேன்..
அவன் போன பாதை பின்பற்ற மணற்துகள்களின்
கால்தடங்களை என் விழி பிம்பமாக பதித்து வைத்தேன் ..
இது என்ன போர்க்களமா !
விருப்பங்கள் எல்லாம் பகைவர்களாகி என் மனதோடு வதாடுதே ..
கால்தடங்களை என் விழி பிம்பமாக பதித்து வைத்தேன் ..
இது என்ன போர்க்களமா !
விருப்பங்கள் எல்லாம் பகைவர்களாகி என் மனதோடு வதாடுதே ..
நான் வெறுக்கவும் இல்லை அவனை மறக்கவும் இல்லை,
என் இரவுகளில் எல்லாம் அவனது கனவுகளின் தொல்லை..
வாழ நினைக்கும் ஒவ்வொரு கணமும்
அவனது நினைவுகளோடுதான் எனது பயணங்கள்..
காட்டுதீ போல் பரவுகிறது என் மனதில் அவனது நினைவு
மழை வந்தும் வாடிய பயிராய் நான்
நீரூற்ற அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பில்....
வாழ நினைக்கும் ஒவ்வொரு கணமும்
அவனது நினைவுகளோடுதான் எனது பயணங்கள்..
காட்டுதீ போல் பரவுகிறது என் மனதில் அவனது நினைவு
மழை வந்தும் வாடிய பயிராய் நான்
நீரூற்ற அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பில்....